திருப்பதியில் விரைவில் 'பஃபே முறை'யில் அன்னதானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்த வரும் இந்த அன்னதானக் கூடத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால், பக்தர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
இதனால், வகேஷ்னா பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் புதிதாக அன்னதானக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இக்கூடம் வடிவமைக்கப்படுகிறது.
மேலும், பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கு பதிலாக, அவரவர் தங்களுக்கு வேண்டியதை தாங்களே பரிமாறிக்கொள்ள வசதியாக 'பஃபே முறை' இங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக உணவுப் பொருட்கள் வைக்கும் 'கன்வேயர் பெல்ட்' அமைக்கப்படுகிறது.
'புதிய அன்னதான கூடத்தின் கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொள்கிறது. கன்வேயர் பெல்ட்டை பென்னா சிமெண்ட் நிறுவனம் வழங்குகிறது. புதிய கூடம் 2010 மார்ச் மாதத்தில் செயல்படத் துவங்கும்' என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications