மதுரையில் விவசாயிகளுக்காக தானியங்கி வானிலை மையங்கள்

Subscribe to Oneindia Tamil

Radar
மதுரை: விவசாயிகளுக்கு மழை நிலவரத்தை தெரிவிக்க மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் கூறியதாவது:

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி, மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆனையூர் உழவர் சந்தை, அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கேசம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் வானிலை ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வானிலை நிலையங்கள் மூலம் வெப்பநிலை, மழையளவு, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் அளவு, சூரிய வெப்பம், மண் ஈரம் மற்றும் வெப்பம், இலை ஈரம், காற்றழுத்தம் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நிலையத்திலும், 20 முதல் 30 கி.மீ சுற்றளவு தூரத்தில் நிலவும் தன்மைகளை துல்லியமாக அறியலாம் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+