மதுரையில் விவசாயிகளுக்காக தானியங்கி வானிலை மையங்கள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் கூறியதாவது:
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி, மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆனையூர் உழவர் சந்தை, அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கேசம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் வானிலை ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வானிலை நிலையங்கள் மூலம் வெப்பநிலை, மழையளவு, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் அளவு, சூரிய வெப்பம், மண் ஈரம் மற்றும் வெப்பம், இலை ஈரம், காற்றழுத்தம் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நிலையத்திலும், 20 முதல் 30 கி.மீ சுற்றளவு தூரத்தில் நிலவும் தன்மைகளை துல்லியமாக அறியலாம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications