இயந்திரம் தயாரிப்பு-கோவை நபருக்கு ஜனாதிபதி விருது
சென்னை: பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த கோவையைச் சேர்ந்த நபருக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது.
கோவையை சேர்ந்தவர் முருகானந்தம் (46). இவர் வெறும் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் புதிய சாதனை ஒன்றை இவர் செய்துள்ளார்.
சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை முருகானந்தம் வடிவமைத்துள்ளார். உள்ளூர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 4 ஆண்டு உழைப்பின் பலனாக இந்த இயந்திரம் உருவாகியுள்ளது.
இந்த இயந்திரத்தை வடிவமைத்த முருகானந்தத்துக்கு இந்தியாவின் சிறந்த பொறியியல் கண்டுபிடிப்பிற்கான குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை அண்மையில் குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் வழங்கினார்.
இந்த விருதுக்கு இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொண்ட சுமார் 37 ஆயிரத்து 843 கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்றாக முருகானந்தம் கண்டுபிடிப்பு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications