For Quick Alerts
For Daily Alerts
Just In
புவிவெப்ப பிரச்னைக்காக அம்மனுக்கு பூஜை
செங்கோட்டை அருகே பெரியபிள்ளை வலசை புது காலனியில் வடக்குத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் இந்த ஆண்டு உலக நன்மை வேண்டி கொடை விழா நடத்தமுடிவு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு கோயிலில் குடியழைப்பு பூஜையும், குழந்தை தொழிலாளர் முறையை ஓழித்து அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.
இன்று மதியம் ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் சேமத்துடன் வாழ அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு ரத்தம் சிநத பூமி வேண்டியும், அம்மனுக்கு பொங்கலிடும் வைபவம் நடந்தது.
இரவு 7 மணிக்கு பூவி வெப்பமடைவதை தடுக்க வேண்டி கனனியாகுமரி மற்றும் குற்றாலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் இதற்கான சிறப்பு பூஜைகள் நடக்கும்.
Comments
Story first published: Wednesday, December 9, 2009, 9:46 [IST]