தமிழகத்தில் கல்வெட்டு இயல் நிறுவனம்: கருணாநிதி கோரிக்கை

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் சார்பில் தேசிய கல்வெட்டு இயல் நிறுவனம் உருவாக்கப்படப் போகும் மகிழ்ச்சியான செய்தியை அறிந்தேன். நாட்டின் பழமையான கல்வெட்டு எழுத்துகளை பாதுகாக்கும் அளப்பரிய முயற்சியாகும் இது.
தொல்லியல் துறையின் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்திய தேசிய கல்வெட்டு இயல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் மிகச் சிறந்த தொல்லியல் அறிஞரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான ஐராவதம் மகாதேவன் முன்வைத்தார்.
தமிழகத்தில் சுமார் 1 லட்சம் வரையிலான கல்வெட்டுகள் உள்ளன. அதில், 60,000 கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. தமிழகத்தில் தேசிய கல்வெட்டு இயல் நிறுவனத்தை அமைப்பதற்குத் தேவையான நிலம் உள்ளிட்டவைகளை ஒதுக்க மாநில அரசு தயாராக உள்ளது.
எனது, இந்த வேண்டுகோளை கனிவுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
"தமிழகத்தில் தேசிய கல்வெட்டு இயல் நிறுவனம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு ஜூனில் நடைபெற இருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அச்சாரமாக இருக்கும் என்று கடிதத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications