நெல்லையில் அக். 10ல் மாநில அளவிலான யோக போட்டி
நெல்லை: நெல்லையில் 10ம் தேதி மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
ஆசனா ஆண்டியப்பன் யோகா மையம் சார்பில் என்ஜிஓ ஏ காலனி திருவள்ளுவர் அரங்கில் அன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கான நுழைவு கட்டணம் ரூ.100. இதை அன்று காலை 8 மணிக்குள் செலுத்த வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவரவர் விருப்படி ஏதாவது 5 ஆசனங்களை மட்டும் செய்யலாம். ஒவ்வொரு வயது பிரிவிலும் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக கோப்பை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் மதிய உணவு வழங்கப்படும்.
சாம்பியன்ஷிப் போட்டி பொது பிரிவாக நடந்தப்படும். இப்பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் ஆண்கள், பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஏற்பாடுகளை நெல்லை ஆசனா யோகா மையத்தினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications