பந்தபுளி கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் பொங்கலிட்டு வழிபாடு
சங்கரன்கோவில்: பந்தபுளி கோயிலில் இன்று திட்டமிட்டபடி தலித் சமுதாய மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொங்கலிட்டு வழிப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தபுளி கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் பிரச்சனை தொடர்பாக இரு பிரிவினர் இடையே வழக்கு நடந்து வருகிறது.
இரு தரப்பினரிடமும் மாவட்ட நிர்வாகம் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவி்ல்லை. இதனால் 2 வருடங்களுக்கு முன் கோயில் சீல் வைக்கப்பட்டது.
இதன்பின்னர் இரு பிரிவினரும் தங்களது ஊருக்கு அருகில் உள்ள வெவ்வெறு மலைகளில் ஏறி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 24-12-2008 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு தலித் பிரிவை சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தலித் மக்கள் கோயிலில் பொங்கல் வைத்து விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
இது தொடர்பாக 13, 19ம் தேதிகளில் எஸ்பி, கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் ஒரு தரப்பை சேரந்தவர்கள் பொங்கல் வைத்து விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன் கோர்ட் தீர்ப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்றனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகத்தினர் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை தாழ்த்தப்பட்ட பிரிவினர் பொங்கிலிட்டு விழா நடத்த வாய்மொழி உத்தரவு வழங்கினர். இதையடுத்து மற்ற 7 சமுதாயத்தினரும் 23ம் தேதி ஊரை காலி செய்து விட்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எட்டுசேரி மலையில் குடியேறினர்.
இந்நிலையில் இன்று காலை அறிவித்தப்படி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா 8 மணிக்கு துவங்கியது. இதையொட்டி டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பொங்கல் விழா நடத்த தலித் மக்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பின்னர் கோயில் முன்பு 41 பானைகள் வைக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது. 3 ஆடுகள் வெட்டப்பட்டன.
மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழா அமைதியாக நடந்தது.












Click it and Unblock the Notifications