திருவனந்தபுரம் நவராத்திரி விழா-விக்ரகங்கள் கேரளாவுப் பவனி
ஆண்டுதோறும் பராம்பரியமாக நடக்கும் நவராத்திரி விழா சுவாமி விக்ரகங்களின் பவனி திருவனந்தபுரம் செல்வதற்காக பத்மனாபபுரத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது.
காலை 7.25 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையின் உப்பரிகை மாளிகை பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர்கள் பயன்படுத்திய உடைவாளை எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கேரள தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் மோகனன்பிள்ளை உடைவாளை எடுத்து குமரி மாவட்ட தேவஸம் போர்டு இணை ஆணையாளர் தனபால், தேவஸம் போர்டு தலைவர் ஸ்ரீதர் ஆகியோரிடம் கொடுத்தார். பின்னர் வாள் ஏந்தி செல்லும் ஊழியர்களிடம் வாள் ஓப்படைக்கப்பட்டது.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு தேவாரம்கெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் வந்து சிறப்பு பூஜைக்கு பின் சரஸ்வதி விக்ரம் எடுத்து வரப்பட்டு நெற்றிவட்டம் கட்டிய யானை மீது முத்துகுடையின் கீழ் அமர்த்திய பின் ஊர்வலம் புறப்பட்டது.
இருபுறங்களிலும் முத்துகுடை பிடித்து வண்ண மலர் தூவியபடி முன்னாள் சிறுவர், சிறுமியர் செல்ல, யானை மீது அமர்ந்து அன்னை சரஸ்வதியும், பல்லாக்கில் அமர்ந்திருந்த வேலிமலை முருகபெருமானும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை தேவியும் பவனியாக புறப்பட்டனர்.
வழியெங்கும் பக்தர்கள் சார்பில் வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications