For Daily Alerts
Just In
இலங்கை எம்பிக்களுக்கு யோகா!
கொழும்பு: இலங்கை பாராளுமன்ற எம்.பி.க்களின் செயல் திறனை மேம்படுத்த அவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் எம்.பி.க்களின் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் மக்கல் பணிகளை அவர்கள் திறம்பட செய்வார்கள் என்றும் இலங்கை அரசு கருத்து தெரிவித்துள்ளனர்.
வருகிற ஜனவரி மாதம் இலங்கை பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அப்போது வாரத்துக்கு 2 நாள் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இந்த வகுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பபட்ட எம்.பி.க்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.
யோகா வகுப்புககள் தொடங்கப்படுவது குறித்து யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை இலங்கை அரசு ஆலோசனை செய்து வருகிறது.
நடிகையும், எம்.பி.யுமான மாலினி பொன்சேகா யோகா வகுப்பை தொடங்கி வைக்கிறார்.
Comments
Story first published: Wednesday, December 8, 2010, 10:45 [IST]