பெங்களூரில் பிரபஞ்சம் குறித்த சர்வதேச மாநாடு

இது குறித்து ஸ்ரீனிவாஸ் ஜோதிஷ் விக்யான் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி தேவனாத ஆச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது
சர்வதேச பிரபஞ்ச மாநாட்டில் பழங்கால ஞானம் மற்றும் நவீன அறிவியல் குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அவர்கள் கால கணிப்பு தொழில்நுட்பம் மற்றும் நாட்காட்டி உருவாக்கம், புவி உருவாக்கம், இயற்கை பேரிடர், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் 70 ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன், எம்.பி. மாதவன் நாயர், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் வி.என். ராஜசேகர பிள்ளை ஐ.ஐ.டி. மும்பை டாக்டர் கே.ராமசுப்பிரமணியம், முன்னாள் நாசா விஞ்ஞானி எச்.ஆர். நாகேந்திரா, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலக அறிவியல் துறை செயலாளர் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications