குற்றாலம் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்

குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
மணிக்குட்டி பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்தி கொடிமரத்தில் கொடியேற்றினர். பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.
விழாவில் 4ம் நாளான 12ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 5ம் நாளான 13ம் தேதி நான்கு தேர்கள் உலா வருவது, 7ம் நாளான 15ம் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 8ம் நாளான 16ம் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் வைத்து நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடக்கிறது. 18ம் தேதி ஐப்பசி திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications