ஆடி அமாவாசை: கரையார், ஏரலில் பக்தர்கள் தர்ப்பணம்
வி.கே.புரம்: ஆடி அமாவாசையையொட்டி கரையார், ஏரலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பாபநாசம் கரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசைத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கால்நட்டுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று ஆடி அமாவாசை என்பதால் பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். எள்ளும், நீரும் இறைப்பதால் அவை தங்களது முன்னோர்களுக்கு உணவாகச் சென்று அவர்கள் அங்கிருந்து ஆசிர்வாதம் செய்வார்கள் என்பது ஐதீகம். மேலும் பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் இந்த தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கி மோட்சம் பிறக்கும் என்பதும் அவர்களது நம்பிக்கை.
இன்று அதிகாலை 4 மணி அளவில் பாபநாசம் சிவன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல் பாபநாசம் அணை பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவி, குற்றாலம் மெயின் அருவி, நெல்லை குறுக்கு துறை தாமிரபரணி ஆறு மற்றும் திருச்செந்தூர் கடலில் ஏராளமனோர் முன்னோ்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.












Click it and Unblock the Notifications