நெல்லையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்த ஓவியக் கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்த ஓவியக் கண்காட்சி நெல்லையில் நடைபெறவுள்ளது. இதில் ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் இடம்பெறுகின்றன.

போர் முகங்கள் என்ற தலைப்பிலான இந்த ஓவியக்காட்சி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை, தஞ்சை ஆகிய நகரங்களில் நடந்துள்ள இந்த கண்காட்சி அடுத்து நெல்லையில் நடைபெறவுள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13.08.2010 அன்று தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது.

கண்காட்சியின் துவக்க விழா 13.08.2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

எழுத்தாளர் தி.க.சி., பேராசிரியர் தொ.பரமசிவம், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் எம்.பிரட்டோ, யாதுமாகி லேனா குமார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார்.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+