இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ 100 கோடி-கருணாநிதி உத்தரவு

திருத்தணியில் முருகன் கோயிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 18 ம் தேதி தொடங்கியது.
மேலும், ரூ 26 கோடி செலவில் தங்க விமானம் கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இவற்றை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் ரூ 450 கோடி மதிப்பீட்டில் சுமார் 4500 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆறாவது நிதிக்குழுவிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரப் பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிவடையும். தங்கவிமானம் அமைக்கும் பணிகள் 35 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த பணியும் நிறைவு பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications