சென்னையில் பிறந்த தமிழ் குழந்தைக்கு ஆங் சான் சூ கியி பெயர்!!
வியாசர்பாடி முனிவேல் தெருவில் வசிப்பவர் மாணிக்கம் (48). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அசாம்- பர்மா எல்லைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்தவர்.
கடந்த வருடம் மகளுக்கு திருச்சியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார். வியாசர்பாடியில் மகள் கிறிஸ்தா (20)-வுடன் தற்போது வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிறிஸ்தாவுக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
மியான்மர் நாட்டு ஜனநாயக பெண் தலைவர் சூகீ 19 மாத வீட்டுர் காவலுக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டதால், அவர் மீது அலாதி மரியாதை கொண்டிருந்த மாணிக்கம் தனது பேத்திக்கு 'சூ கியி' என்று பெயர் சூட்டினார்.
அக்கம் பக்கதாருக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த தலைவரது பெயரை சூட்டி இருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.