ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை அதிகாலை பரமபதவாசல் திறப்பு: இன்று மோகினி அலங்கார வைபவம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 6-ம் தேதி திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. கடந்த 7-ம் தேதி தொடங்கிய பகல்பத்து உத்சவத்தின் பத்தாம் நாளான இன்று மோகினி அலங்கார வைபவம் நடைபெறுகிறது.

இதையடுத்து நாளை இராப்பத்து உத்சவம் தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு விழா நாளை அதிகாலை 4.15 மணிக்கு நடககிறது. நாளை இரவு 10 மணி வரை பரமபதவாசல் திறந்திருக்கும்.

பின்னர், இராப்பத்து உத்சவ காலத்தில் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையும், 25-ம் தேதியும் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், 23-ம் தேதி மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரையும், 26-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்திருக்கும். 24-ம் தேதி பரமபதவாசல் திறக்கப்படாது.

இது தவிர்த்து வரும் 23-ம் தேதி திருக்கைத்தல சேவை, 24-ம் தேதி வேடுபறி, 27-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகிய வைபவங்கள் நடைபெறவிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+