பிறந்த குழந்தைக்கு பசும் பால் நல்லது-ஆய்வு
பிறந்த குழந்தைளுக்கு தாய்ப்பாலைப் போலவே பசும்பாலும் கொடுக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
குழந்தை பிறந்து 15 நாட்களுக்கு பசும்பால் கொடுப்பது மிகவும் நல்லது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் பல்வேறு அலர்ஜிகளை தடுக்கலாமாம்.
இதுகுறித்து டெல் அவிவ் பல்கலைக்கழக குழந்தைகள் பிரிவு பேராசிரியர் இட்சாக் கட்ஸ் கூறுகையில், குழந்தை பிறந்து முதல் 15 நாட்கள் வரை அவற்றுக்கு பசும்பால் கொடுத்து வந்தால், பின்னாளில் பசும்பால் புரோட்டீனால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியும்.
இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னாளில் உடலில் புள்ளிகள் வருவது, மூச்சுத் திணறல் ஏற்படுவது, அதிர்ச்சிகளால் பாதிக்கப்படுவது போன்றவற்றையும் கூட தவிர்க்கலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு தினசரி இரவு ஒரு குவளை பசும்பால் தரலாம். அதேசமயத்தில் தாய்ப்பாலும் போதிய அளவுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
அதேசமயம், ஆரம்ப கட்டத்தில் பசும் பால் கொடுக்காமல், குழந்தைக்கு 3 முதல் 5 மாதம் இருக்கும் வரையிலான காலகட்டத்தில் பசும்பாலைக் கொடுக்கக் கூடாது. அது அபாயத்தை ஏற்படுத்தலாம்.
தொடக்கத்திலேயே பசும்பாலைத் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒரு வருடம் போன பிறகுதான் தர வேண்டும் என்றார்.