சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
சென்னை: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மயிலாப்பூர் மண்டலம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்த மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கான மருத்து மதிப்பீட்டு முகாமை வித்யாசகர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை இந்திராநகர் அடையாறு, 29-வது குறுக்குதெருவில் இந்த முகாம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னம்மாள், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமாதானம், வித்யாசாகர் அமைப்பின் தீப்தி பாட்டியா, வகாப் மற்றும் அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், அமலி அருணா உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முகாமில், கண்பரிசோதனை, காது பரிசோதனை மற்றும் உடலியக்க குறைபாடு உள்ள குழந்தைகளை அளவிடுதல் மற்றும் மனநல மருத்துவர் ஆகியோர் இம்முகாமில் சிறப்பேற்று நடத்தினர்.
இதில், பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 204 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர், அவர்களின் ICDS, HBT (Home Based Training) உதவி உபகரணங்கள் கணக்கெடுத்து விரைவில் வழங்கப்பட உள்ளது.