திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்க பரிந்துரை: சுற்றுலாத் துறை ரூ.2.87 கோடி நிதி

Subscribe to Oneindia Tamil

Tiruchendur Murugan Temple
நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார்.

இது குறித்து கோயி்ல் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது,

சென்னை கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோயில் கணக்குகளை முறையாக பராமரிப்பது, நிர்வாகம் முறையாக செயல்படுவது, பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இருப்பிடம், குடிநீர், குளியலறை, கழிப்பறை உள்பட பல்வேறு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

கோயிலின் வசதிகளை மேம்படுத்த சுற்றுலாத் துறை சார்பாக ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களுக்கு தங்கும் வசதி, கழிவறை கட்டப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் செலவில் நவீன முடி காணிக்கை செலுத்தும் இடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் ரூ.99 லட்சத்தில் பக்தர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய அறைகள் கட்டப்பட உள்ளது. ரூ. 1 கோடி செலவில் பக்தர்களுக்கு 22 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கோயில் பிரகாசமாக இருப்பதற்காக 12 இடங்களில் ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. பிரகாரம் முழுவதும் கிரானைட் பதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு கோயிலின் தூய்மை மேம்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் ஐஎஸ்ஓ சான்றிதழுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+