கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்கம் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கன மழையால் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்குவதை பாரத் ஏர்வேஸ் தள்ளி வைத்துள்ளது.
கொச்சியி்ல் இருந்து சபரிமலைக்கு இந்த ஆண்டு முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்கு பெங்களூரில் உள்ள பாரத் ஏர்வேஸ் நிறுவனம் பொறுப்பேற்றது.
இப்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருவதால் நேற்று முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என பாரத் ஏர்வேஸ் அறிவித்திருந்தது. ஆனால் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்குவது இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் இயக்குநர் சசிகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications