சாக்கு மூட்டையில் காளி சிலை-விழுப்புரம் அருகே மக்கள் பீதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் சாக்கு மூட்டையில் காளி சிலை இருந்ததால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரும்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் அருகே 5 அடி நீளமுள்ள சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது.
அந்த சாக்கு மூட்டையைப் பார்த்தவர்கள் எல்லாம் அதில் யாராவது கொலை செய்யப்பட்டு சடலம் இருக்கலாம் என்று நினைத்து ஊர் கூட்டம் போட்டனர். கூட்டத்தில் இது குறித்து போலீசாருக்கு தகவல் கெடுப்பது என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தகவலும் கொடுக்கப்பட்து.
இதனையடு்தது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தனர். அதில் 5 அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன காளி சிலை ஒன்று இருந்தது.
அந்த சிலையை அரும்பட்டு கிராம மக்கள் வாங்க மறுத்ததை அடு்த்து அதை போலீசார் கொண்டு சென்றனர். மேலும், காளி சிலை அநத இடத்திற்கு எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications