சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்த பிறகு தான் சாமியைத் தரிசிக்க முடிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டத்தால் சபரி்மலை திணறி வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்தபடி உள்ளனர்.
நேற்று சன்னிதானத்தில் காலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மாலை 6 மணி்க்கு பிறகுதான் அவர்களால் சாமியைத் தரிசிக்க முடிந்தது. சாலக்காயம் அருகே நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெய் அபிஷேகம் செய்யவும் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சபரிமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.