துபாயில் தமிழ்த்தேர் 4ம் ஆண்டு விழா-கலை இலக்கிய விழா
துபாய்: துபாயில் வானலை வளர் தமிழ் தமிழ்த்தேர் 4ம் ஆண்டு விழா மற்றும் அமீரகத் தமிழ் இலக்கியக் கலை விழா ஆகியவை ஏப்ரல் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, துபாய், இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் உள்ள ஷேக் ராஷித் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் பிறைசூடன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, சன் டிவி தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, நடிகர் கருணாஸ், இயக்குநர் கெளதமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், தமிழக நாட்டுப்புறக் கலைஞர் சுரேஷ் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடைபெறுகிறது.
மேலும் சன் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை ஷானவாஸ் மற்றும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ் விக்னேஷ் கார்த்திக் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவு்ளன.
இலவச அனுமதிச் சீட்டு பெற 050-5646267, 5659711, 4226752, 1107963, 8650456, 3562957 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications