ராஜீவ் காந்தி விருதுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய தர நிர்ணயக் குழு சார்பில் 2009ம் ஆண்டின் ராஜீவ்காந்தி தேசிய தர விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களின் மதிப்பு மற்றும் பொருட்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த விருதுக்கு இந்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் விண்ணப்பிக்கலாம்.
புகையிலை மற்றும் மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருது பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பரிசுத்தொகை கிடைப்பதோடு, வர்த்தக உலகில் நல்ல அங்கீகாரமும் இதன் மூலம் கிடைக்கும்.
http://www.bis.org.in/other/rgnqa_geninfo_09.pdf என்ற இணைப்பின் மூலம் இவ்விருது தொடர்பான முழு விவரங்களை அறிந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
அல்லது 044 2254 2080 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் பெறலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 26.












Click it and Unblock the Notifications