ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு
சென்னை: ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் செயலாளர் கா.அலாவுதீன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டுக்கான தற்காலிக ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இந்த மாதம் 15-ந் தேதி வரை மும்பை, மத்திய ஹஜ் குழு நீட்டித்து உள்ளது.
எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த விருப்பமுள்ள முஸ்லிம் விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து நடைமுறைகளை பின்பற்றி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஹஜ் விண்ணப்பங்கள் ரோஸி டவர், மூன்றாவது தளம், புதிய எண்.13., மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) சென்னை-600034 என்ற முகவரியில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஹஜ் அலுவலகத்துக்கு 15-5-2010 தேதிக்குள் வந்து சேரவேண்டும். ஹஜ் 2010-க்கான தேர்வு மற்றும் உறுதி செய்வது குறித்த நடைமுறைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications