இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு துபாயில் வரவேற்பு
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் துவக்கம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.
துவக்கமாக காயிதெமில்லத் பேரவை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார்.
பொருளாளர் கீழை ஹமிதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் புரவலர் நாகூர் ஷேக் தாவூது, ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி முஹம்மது இக்பால், நாகை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது அலி, ஈரோடு லட்சுமி நகர் பிரைமரி தலைவர் ஜி. அன்வர் பாஷா, உள்ளிட்டவர்களை வரவேற்றார். அவர்களது சேவைகள் குறித்தும் விவரித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகி முஹம்மது இக்பால் அவர்கள் தனது ஏற்புரையில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொண்டார். அரசுத்துறையில் சிறுபான்மையினர்க்கு உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை நாம் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து புரவலர் நாகூர் ஷேக் தாவூது, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது அலி உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
பொதுச்செயலாளர் கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.
நிகழ்வில் அமைப்புச் செயலாளர் கீழக்கரை ஹமீதுயாசின், ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லாஹ், மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ரியாஸ் அஹமத், செயலாளர்கள் அய்யம்பேட்டை வாலன் சுலைமான், அய்யம்பேட்டை குண்டு ராஜாஜி காஸிம், வழுத்தூர் முஹைதீன் பாட்சா, கோட்டாறு முஹம்மது ரஃபி, ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை பாட்சா கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications