நிலச்சரிவு காரணமாக நெல்லை-சென்னை சிறப்பு ரயில் ரத்து
கோடை விடுமுறையை ஓட்டி ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியதை அடுத்து தென்னக ரயில்வே அதிகளவில் சிறப்பு ரயில்களை இயக்கியது. இதில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்று கிழமைகளில் சென்னை சென்டரலுக்கு வண்டி எண் 0604 சிறப்பு ரயில் கடந்த 4-4-2010 முதல் இயக்கப்பட்டது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மாலை 5.50 மணிக்கு வந்து 6 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதனால் எப்போதும் சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை-சென்னை சிறப்பு ரயிலில் இன்று செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று கொங்கன் ரயில்வேயில் கோப்பூர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஜாங்கிதாம் எக்ஸ்பிரசைதான் ரயில்வே நிர்வாகம் சென்னை சென்டரலுக்கு சிறப்பு ரயிலாக இயக்கி வருகிறது. தற்போது இந்த பாதையில் நிலச்சரிவு காரணமாக ஜாங்கிராம் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நெல்லை சென்ட்ரல் சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications