டாஸ்மாக் இருக்கும் வரை வறுமையும் இருக்கும்: தமிழருவி மணியன்

Subscribe to Oneindia Tamil

Tamilaruvi Manian
நாமக்கல்:​ டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தமிழகத்தில் வறுமை இருந்து கொண்டுதானிருக்கும் என்று காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

காந்திய அரசியல் இயக்கத்தின் சார்பில் நாமக்கல்லில் சிந்தனைக் கருத்தரங்கு நடைபெற்றது.

அப்போது தமிழருவி மணியன் பேசுகையில், 'டாஸ்மாக் கடைகள் மூலம் பெறக்கூடிய வருமானத்தில் தமிழக அரசு பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.​

இலவச திட்டங்கள் வேண்டும் என தமிழக அரசிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.​

வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் இலவச திட்டங்கள் குறித்த கவர்ச்சிகர அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டது.​

தற்போது,​​ இந்த திட்டங்களுக்காகவே தமிழக மக்களை குடிமகன்களாக மாற்றி வருகிறது.

இலவச வேட்டி,​​ சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறுகையில் தமிழகத்தில் மாற்று உடையில்லாமல் 3 கோடி மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.​

இதற்காக ஆண்டுக்கு ரூ.​ 2,600 கோடி செலவில் இலவச வேட்டி,​​ சேலை வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.​

ஆனால்,​​ 2008-09ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையில் மது மீது விதிக்கப்பட்ட உள்நாட்டு வரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றின் மூலமாக மட்டும் ரூ.​ 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளது.​

மது மீதான வரி மூலமே 10 ஆயிரம் கோடி வருவாய் என்றால் இந்த தொகையை வைத்து மாற்று உடையில்லாமல் உள்ள 3 கோடி மக்களை வசதியாக வாழ வைக்க முடியும்.

இதை விடுத்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி,​​ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி,​​ உயிர்காக்கும் காப்பீடு திட்டம் என்பதெல்லாம் மக்களை சிந்திக்க செய்யாமல் வைத்திருப்பதற்கே.​

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கும் கிராம மக்கள்தான் தினமும் 70 ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை அருந்தும் நிலை உள்ளது.​

உயிர்காக்கும் காப்பீடு திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.​ 600 கோடி தனியார் நிறுவனத்துக்கு வழங்கினால் 5 ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி வழங்க வேண்டியுள்ளது.​

இந்த 3 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் தலா 100 கோடி செலவில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அரசே துவக்க முடியும்.​

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையும் ஓராண்டில் உணவு,​மருந்துக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால் மது குடிக்க செலவிடும் தொகையே அதிகமாக உள்ளது.​

இந்தநிலை மாற வேண்டும்.​ இலவச திட்டம் என்பது கல்விக்கு மட்டுமே இருக்க வேண்டும்.​ இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றாமல் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக மக்களை தயார்படுத்த வேண்டும்.​

பொதுநல அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும்,​​ கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்.​ மது விற்பனையால் வரும் வருமானம் பாவத்தின் சம்பளம் என்பதை உணர வேண்டும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+