For Daily Alerts
Just In
மீண்டும் கலைமாமணி, தமிழ்மாமணி வழங்க புதுச்சேரி கலைஞர்கள் கோரிக்கை
காரைக்கால்: கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளை மீண்டும் வழங்கக் கோரி காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்ற தலைவர் எஸ்.எஸ். ஹாஜாமெய்தீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது,
புதுச்சேரி அரசு கலைபண்பாட்டுத்துறை சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கலைஞர்களுக்கு கலைமாமணி' மற்றும் தமிழ்மாமணி' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் வயதான திறமையான கலைஞர்கள் பலர் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் 60ல் இருந்து 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். வயதானாலும் அவரவர் துறைகளில் இன்றும் சிறந்து விளங்குகின்றனர். எனவே, அவர்களின் கடைசி காலத்திலாவது அவர்களையும் அவர்களின் துறைகளையும் கௌரவித்து கலைமாமணி மற்றும் தமிழ்மாமணி விருதுகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.
Comments
Story first published: Tuesday, June 22, 2010, 15:36 [IST]