For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‎ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: ராஜ் தாக்கரே பாராட்டு

By Chakra
Google Oneindia Tamil News

Raj Thackeray
மும்பை: கோவையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜ் தாக்கரே,

கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்ற உன்னதமான முயற்சி மராத்தி மொழிக்காக இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்த விதம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு ரூ.315 கோடி செலவில் இந்த மாநாட்டை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

மராத்தியில் இலக்கியத்துக்கோ அல்லது நாடகத்துக்கோ நடத்தப்படும் மாநாடுகள் கடைசியில் பெரும் சர்ச்சையில்தான் முடிகின்றன.

நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை மறந்து மராத்தி மொழிக்காக ஏன் நாம் ஒன்றுபடக் கூடாது?.மகாராஷ்டிர அரசு சமீபத்தில் தொடங்கப்பட்ட மராத்தி மொழித் துறைக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்தப் பணம் அடிக்கல் நாட்டு விழா நடத்தக் கூட போதாது.

மராட்டி அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளிலேயே மராத்தி மொழி புறக்கணிக்கப்படுவது வேதனையான விஷயம் என்றார்.

ராஜ் தாக்கரேவின் மகன் அமித் ஆங்கில மீடியத்தில் படித்து வருவதும், 12ம் வகுப்பில் அவர் மொழிப் பாடமாக மராத்தியை தவிர்த்துவிட்டு ஜெர்மன் படித்ததும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X