For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை புதிய மேல்சாந்தி சசி நம்பூதிரி

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலை கோவிலின் புதிய மேல்சாந்தியாக சசி நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் கோவில்களுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை திருவிழா முதல், அடுத்த ஒரு ஆண்டுக்கு புதிய மேல்சாந்திகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி, இந்த ஆண்டின் மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. திருச்சூர் செறுதுருத்தி அருகே உள்ள பைங்குளம் எழிக்கோடு மனையை சேர்ந்த சசி நம்பூதிரி சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதே போல், மாளிகைப்புரத்து அம்மன் கோவிலுக்கான மேல்சாந்தியாக வள்ளிக்குன்னம் தனஞ்ஜெயன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட மேல்சாந்திகள், வருகிற மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படும்போது பதவி ஏற்க உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X