பெயர்பலகையில் தமிழ் கட்டாயம் - சென்னை மேயர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் பெயர் பலகைகளை வைக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்று சென்னை மேயர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் வர்த்தக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகைகளை கட்டாயமாக தமிழில் எழுத வேண்டு்ம் என்று தமிழக அரசு கடந்த சட்டம் இயற்றியது.

தமிழ்நாடு கடைகள் மற்றம் வர்த்தக அமைப்புகள் சட்டம், 1948ன் கீழ் தமிழில் பெயர் பலகைகள் அமைய வேண்டியது கட்டாயமாகும்.

தமிழ் மொழியில் பிரதானமாகவும், அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலமும், இதைத் தொடர்ந்து இதர மொழிகளிலும் பெயர் பலகைகளை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மெட்ரோ மாநகரமான சென்னையில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் முதலீடு செய்வதால் சில நிறுவனங்கள் தமிழ் பெயர் பலகையை கடமைக்காக ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு பிரதானமாக ஆங்கிலம் தெரியும் வகையில் வைத்திருப்பதாக அடிக்கடி சர்ச்சை எழும்.

வரும் அடுத்த சில மாதங்களில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகைகள் விவகாரத்தை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் இதற்கான கண்காணிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுவார்கள். விதியை பின்பற்ற தவறியவர்களுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.

அதற்குள் அவர்கள் தமிழில் பெயர் பலகையை அமைக்க வேண்டும். வரும் ஜூன் மாதம் 1ம தேதி இச்சட்டத்தை மீறியதாக காணப்படும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்ரமணியன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+