For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு இலவச சேலையின் நீளம் அதிகரிப்பு-ரூ.21 கோடி கூடுதல் நிதி ஓதுக்கீடு

Google Oneindia Tamil News

Free Saree
நெல்லை: தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச சேலையின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து ஐந்தரை மீட்டராக தரம் உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.21 கோடி செலவிடவும் உதேசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 2 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் வறுமைகோட்டிக்கு கீழ் உள்ள அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது.

வரும் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேஷ்டி, சேலையின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து ஐந்தரை மீட்டராக உயர்த்தி வழங்கவும், தரம் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.21 கோடி கூடுதல் செலவாகும்.

மேலும் இந்த இலவச வேஷ்டி சேலைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் நலன் கருதியும், அவர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாகவும் சாதாரண தறிகளுக்கு பதிலாக 2500 பெடல் தறி வழங்க அரசு நடப்பாண்டில் ரூ.9 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X