வாஷிங்டனில் நிறுவப்படும் திருவள்ளுவர் சிலை மதுரையில் தயார்
மதுரை: வாஷிங்டனில் நிறுவுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை மதுரையில் தயாராகி உள்ளது.
அமெரிக்காவில் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற அமைப்பை பேராசிரியர் செல்வின்குமார் என்பவர் நடத்திவருகிறார். இந்த அமைப்பு சார்பில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த சிலை மதுரை பூம்புகார் நிறுவனம் மூலம், சுவாமி மலை பூம்புகார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாலரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன இச்சிலை, கன்னியாகுமரி கடல் நடுவே தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் 3 மாதமாக இச்சிலை உருவாக்கப்பட்டதாக பூம்புகார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் செல்வின்குமார் கூறுகையில், 'அமெரிக்காவின் வாஷிங்டனில் காந்தியடிகளின் சிலை ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது. அதன்பிறகு, திருவள்ளுவர் சிலை இப்போது அமைக்கப்படுகிறது.
இதன்மூலம், உலகத் தமிழர்களிடையே தமிழின் தொன்மை, பாரம்பரியத்தை எடுத்துரைக்கலாம்' என்றார்.












Click it and Unblock the Notifications