புஜைராவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்

நேர மேலாண்மை குறித்த விளக்கம், நேரத்தை கண்காணிக்க வேண்டிய அவசியம், நேர பயன்பாட்டு நுட்பங்கள், அன்றாடம் செய்யக் கூடிய செயல்களை திறனுடன் செய்யும் முறைகள், நம் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் நம் பழக்க வழக்கங்கள், நம் நேரத்தை திருடும் காரணிகள் போன்றவற்றைப் பற்றி வகுப்புகள் அமைந்திருந்தன. புரொஜக்டர் மூலமாக ஒலி ஒளியுடன் எளிமையான நடையில் பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இம் முகாமில் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கருத்து தெரிவித்த ஷார்ஜா இஸ்லாமிய வங்கியின் அலுவலர் நிலாமுதீன் அவர்கள் இந் நிகழ்ச்சி இன்னும் அதிகமான மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனவும் அதன் மூலம் மக்கள் வெகுவாக பயனடைவார்கள் எனவும் கூறினார். இனி வரும் நாட்களில் தங்களது நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள இந்நிகழ்ச்சி வழிவகுத்ததாக கருத்துப் படிவத்தில் பெண்கள் தெரிவித்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை இலங்கை மக்பூல், சர்புதீன், மலமஞ்சனூர் அன்சர்கான் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
செய்தி: இப்னு மக்பூல்












Click it and Unblock the Notifications