எச்ஐவி நோய் - தடுப்பதில் தமிழகம் முன்னணி - சம்பு கலோலிகர் பெருமிதம்

மதுரையில் அவர் நிருபர்களிடம் இதுபற்றி கூறுகையில், 'எயிட்ஸ் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏ.ஆர்.டி. மையங்கள் மூலம் இலவச கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், 37 மையங்கள் செயல்படுகின்றன. கடந்த 2009 ம் ஆண்டு அக்டோபர் இறுதி வரை 40 ஆயிரம் எச்ஐவி நோய் பாதிப்பு உள்ளவர்கள், கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது தவிர 46 கூடுதல் மையங்கள் தாலுகா அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், எச்ஐவி நோய் பரவாமல் தடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
பெண்கள் மூலம் குழந்தைக்கு எச்ஐவி பரவும் விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
சேலத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். அதே போன்று, கரூர், நாமக்கல், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களிலும் எச்ஐவி நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம் உள்ளனர்.
இந்த நோயாளிகளுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்க, 16 அரசு மருத்துவமனைகளில் சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன' என்றார்.












Click it and Unblock the Notifications