50 வருடமாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதி 45 முறை தோல்வி கண்ட முதியவர்
லக்னோ: உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் உசேன் என்ற 66 வயது முதியவர் கடந்த 50 வருடங்களாக பத்தாவது வகுப்புத் தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 45 முறை தேர்வெழுதியுள்ள அவர் அத்தனை முறையும் பெயில் ஆகியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள பின்ட்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். 66 வயதாகும் இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தன் 16-வது வயதில் முதன் முதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார். அதில் தோல்வி அடைந்தார். பிறகு படிப்பைத் தொடர முடியாமல் கடை வைக்க போய்விட்டார்.
என்றாலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது தேர்வாக வேண்டும் என்று ஜாபர் உசேன் ஆசைப்பட்டார். மீண்டும், மீண்டும் எழுதியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. இப்படி 44 தடவை கடந்து விட்டது. வயதும் 66 ஆகிவிட்டது. இந்த நிலையில் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜாபர் உசேன், சமீபத்தில் 45-வது தடவையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். அதுவும் புட்டுக் கொண்டு விட்டது.
அதை விட தேர்வு எழுதிய ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களிலும் அவர் பெயிலாகி விட்டார். இருந்தாலும் ஜாபர் விடுவதாக இல்லை. அடுத்த வருஷம் தேர்வெழுதி எப்படியாவது பாஸ் ஆயிருவேன்ல என்று கூறி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 10-ம் வகுப்பில் பாஸ் ஆகி விட வேண்டும் என் பதை நான் வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளேன். ஒவ்வொரு தடவை தேர்வு எழுதி முடித்ததும் அதில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்று என்னை நான் திருத்திக் கொள்வதுண்டு. இந்த தடவை சில தவறுகளை செய்து விட்டேன். அடுத்த தடவை நிச்சயம் பாசாகி விடுவேன் என்றார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications