For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழினப் படுகொலைகள்-புத்தகம் வெளியீடு

By Chakra
Google Oneindia Tamil News

கோவை: தமிழினப் படுகொலைகள் என்ற திறனாய்வுப் புத்தகம் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது நடைபெறும் புத்தக விழாவில் வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து மனிதம் என்ற மனித உரிமைக்கான அமைப்பின் நிர்வாக செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,

'தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகம் வரும் ஜூன் 23ம் தேதி கோவையில் தொடங்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடங்கப்படவுள்ள சிறப்பு புத்தக விழாவில் 74 ம் எண்ணுள்ள புத்தகக் கடையில் சிறப்புக்குரிய வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

உலகம் முழுக்க விற்பனையாகி வரும் "தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வெளியிடப்பட்ட புத்தகமாகும். அதே போன்று தமிழகத்தின் கோவை நகரிலும் அறிமுக விழா எடுக்கப்பட்டது.

இந்த புத்தகம், அன்மையில் கனடாவிலும், நார்வே நாட்டிலும் அறிமுக விழா நடத்தப்பட்டது.

"தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில், புத்தகத்தை தமிழ் உலகில் சிறப்பாய் அறியப்பட்டு வரும் பிரான்ஸ்சை சேர்ந்த சோபாசக்தி அவர்களும், கனடாவில் ஈழத்தமிழர்களுக்காக அயராது உழைத்து வரும் அய்யா வேலுபிள்ளை தங்கவேலு அவர்களும் ஆவணப் புத்தகத்தை, திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள திறனாய்வுகளை தற்போது, மனிதம் சார்பில் புத்தக வடிவில் பல்லாயிரக்கனக்கில் அச்சிட்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது சிறப்பு புத்தக விழாவில் இலவசமாய் வழங்க உள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X