துபாயில் நகரத்தார் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்: 25 பேர் ரத்ததானம்
Subscribe to Oneindia Tamil

துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு (INK) மற்றும் அல் வாஸல் மருத்துவமனை ஆகியவை இணைந்து 136-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ரத்த தான முகாம் ஒன்றை கடந்த 4ம் தேதி அல் வாஸல் மருத்துவமனையில் நடத்தின.
இதில் 3 பெண்கள் உள்பட 25 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
வரும் ஆண்டுகளில் இதே போல் அதிக அளவு நண்பர்கள் கலந்துக் கொண்டு ரத்த தானம் வழங்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
'நாடு எதுவாயினும் உயிர் ஒன்று தான் என்பதைக் கொண்டு உயிர் காக்க ரத்த தானம் செய்வீர்' என்ற வேண்டுகோளுடன் இந்த ரத்ததான முகாம் சிறப்புற நடைபெற்றது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகரத்தார் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அழகப்பன், மணிகண்டன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications