11 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது: அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவிப்பு
சென்னை: தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் 11 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது வழங்கப்படவிருக்கிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11 பேருக்கு தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் அறிவியல் அறிஞர் விருது வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
விருது பெறுபவர்கள் விவரம்,
1.பி.சுப்பையன், பேராசிரியர், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம்
2. இ.பத்மினி, இணைப்பேராசிரியர், உயிர்வேதியியல்துறை, பாரதி மகளிர் கல்லூரி, சென்னை
3. பி.ராஜ்குமார், பேராசிரியர், அங்கக வேதியியல் துறை, சென்னை பல்கலைக்கழகம்
4.ஜி.விக்டர்ராஜமாணிக்கம், இயக்குனர், ஆய்வு மையம், சாய்ராம் குழுமநிறுவனம், சென்னை
5. சி.பாலாஜி, பேராசிரியர், இயந்திர பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐ.ஐ.டி.) சென்னை
6. எஸ்.சோமசுந்தரம், பேராசிரியர், கணிதவியல்துறை, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை
7. டாக்டர் சத்திய மூர்த்தி, இருதயவியல் துறை, அப்பல்லோ மருத்துவமனை, சென்னை
8. பி.சச்சிதானந்தம், பேராசிரியர், மருத்துவ உயிர் வேதியியல் துறை, சென்னை பல்கலைக்கழகம்
9. பி.குழந்தைவேல், பேராசிரியர், இயற்பியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
10. டி.சிவகுமார், பேராசிரியர், கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை
11. கே.பார்த்தசாரதி, பேராசிரியர், வாழ்நாள் கல்வித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.10,000 பணமுடிப்பும் விருதும் வழங்கப்பட உள்ளது.
இவர்களுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. முன்மொழிவுகள் பெறும் கடைசி நாள் நவம்பர் 15ம் தேதி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications