For Daily Alerts
Just In
இன்று துபாயில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி: குழுமூர் மௌலானா மௌலவி அன்சர் அலி ஆலிம் மக்தூமி உரை
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நடத்தும் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (12-10-11) மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் "நிம்மதியைத் தேடி மனிதன்" எனும் தலைப்பில் குழுமூர் மௌலானா மௌலவி அன்சர் அலி ஆலிம் மக்தூமி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
Comments
English summary
Dubai Sunnath wal Jamaath has arranged for an islamic speech programme today (12-10-11) in in Ascon D block, Dubai. Moulana moulavi Ansar Ali Aalim Makhdoomi will give a speech titled 'Nimmathiyai thedi manithan'. All are invited.
Story first published: Wednesday, October 12, 2011, 11:32 [IST]