சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் ரிசர்வேஷன் - முதல் நாளே அமோக வரவேற்பு
கார்த்திகை ஒன்றாம் தேதி நாளை பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக் காலம் நாளை தொடங்குகிறது.
இதையொட்டி, சபரிமலை கோயில் மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி சசிநம்பூதிரி கோயில் நடையை திறப்பார். பின்னர், புதிய மேல்சாந்திகளாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பாலமுரளி நம்பூதிரி, ஈஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் சடங்கு நடைபெறும்.
இதனையடுத்து கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலை கோயில் நடையை பாலமுரளி நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் கோயில் நடையை ஈஸ்வரன் நம்பூதிரியும் திறப்பார்கள். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நாளை முதல் நெய் அபிஷேகமும் தொடங்கும்.
பாதுகாப்பு அதிகரிப்பு
மண்டல காலம் தொடங்குவதை முன்னிட்டு சபரிமலை கோயிலில் இந்த ஆண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சன்னிதானத்தில் 15 டிஎஸ்பிக்கள், 28 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படுவார்கள். இவர்கள் தவிர மத்திய அதிரடி வீரர்களும், கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பார்கள். பம்பையிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு
நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செவ்வாய்கிழமையன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர். இதேபோல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களான பம்பா, சந்நிதானம், நிலைக்கல்,எருமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு சுகாதார வசதியை செய்து தர வேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் www. sabarimala.keralapolice. gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும்போது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் எண்ணை குறிப்பிட்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
இதையடுத்து, அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படும். பக்தர்கள் அந்த அனுமதி சீட்டை பிரின்ட் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். தரிசன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாக சன்னிதானத்துக்கு வந்து விட வேண்டும். எந்த இடத்திலும் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. வரும்போது பக்தர்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படமும், அடையாள அட்டையும் கொண்டு வர வேண்டும். என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்தில் மாறுதல்
பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் நிலைக்கல் பகுதியிலேயே நிறுத்தப்படும். அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் பம்பைக்கு செல்ல வேண்டும். கார் உட்பட சிறிய வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும். ஆனால், பக்தர்கள் பம்பையில் இறங்கியதும் வாகனங்களை நிலைக்கல் பகுதிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications