23ல் துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிச்சங்கமம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர கவிச்சங்கமம் வரும் 23ம் தேதி நடக்கிறது.
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர கவிச்சங்கமம் வரும் 23ம் தேதி காலை 9.55 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெறுகிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காவிரிமைந்தன் தெரிவித்தார்.
'ஏன்' எனும் தலைப்பில் நடக்கவிருக்கும் கவியரங்கில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமீரகத்திலுள்ள கவிதை ஆர்வலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து 'இனி' எனும் தலைப்பில் உருவான கவிதைகளைத் தொகுத்து தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 2519693 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications