வீரா, ராமா, சந்திரா: வண்டலூர் பூங்கா வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய ஜெயலலிதா
சென்னை: வண்டலூர் விலங்கியல் பூங்காவில் பிறந்துள்ள 2 வெள்ளை நிற புலிக்குட்டிகளுக்கும், 1 சிங்கக் குட்டிக்கும் வீரா, ராமா, சந்திரா என்று முதல்வர் ஜெயலலிதா இன்று பெயர் சூட்டினார்.
வண்டலூர் விலங்கியல் பூங்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அனு என்ற வெள்ளைப் புலி ஒரு ஆண், ஒரு பெண் குட்டியை ஈன்றது. கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி கவிதா என்ற சிங்கம் ஒரு சிங்கக் குட்டியை ஈன்றது. அந்த குட்டிகளுக்கு தமிழ் பெயர்கள் வைப்பது என்று பூங்கா அதிகாரிகள் முடிவு செய்தனர். பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு தமிழ் பெயர் வைக்கும் திட்டத்தை பூங்கா அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினர்.
இதையடு்தது 2 புலிக்குட்டுகளுக்கும், 1 சிங்கக் குட்டிக்கும் பெயர் வைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை பூங்கா அதிகாரிகள் அணுகினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் சிங்கக் குட்டிக்கு வீரா என்றும், ஆண் புலிக்குட்டிக்கு ராமா என்றும், பெண் புலிக்குட்டிக்கு சந்திரா என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் ஒரு ஆண் மற்றும் 2 பெண் புலிக்குட்டிகளுக்கு செம்பியன், இந்திரா, வள்ளி என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
ராமா மற்றும் சந்திராவின் பெற்றோர் பீஷ்மா(9), அனு (8). அந்த 2 இரண்டு புலிகளை டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் இருந்து கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு வந்தனர்.
3-3-2009 அன்று தான் அனு முதன்முதலாக 3 குட்டிகளை ஈன்றது. ஒரு வாரம் கழித்து 3-ல் ஒரு குட்டி இறந்தது. இதையடுத்து அந்த 2 பெண் புலிக் குட்டிகளுக்கு ஆகான்ஷா, அம்ருதா என்று பெயரிடப்பட்டது. 15 மாதங்கள் கழித்து மறுபடியும் 2 குட்டிகளை ஈனறது அனு.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications