Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே 1 ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: வறட்சி காரணமாக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் வரும் மே மாதம் 1-ம் தேதி திறக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக காப்பகம் மூடப்பட்டது.

தற்போது கோடை மழை நல்ல முறையில் பெய்து வருவதால், அனைத்து இடங்களும் பசுமையாக காட்சி தருகின்றன.

இதைத் தொடர்ந்து வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஊட்டியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜிவ் ஸ்ரீவத்சவா கூறியதாவது,

முதுமலையில் நிலவிய வறட்சி மாறி தற்போது பசுமையாக உள்ளது. அதனால் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் சுறுறுலாப் பயணிகள் பார்வைக்காக திறந்து விடப்படுகிறது. மே மாதம் 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை முதுமலையில் உள்ள வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கவிருப்பதால் அந்த காலத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. இந்த பணிக்காக 25 டிரான்சிட்கள் அமைக்கப்பட்டு, 100 பேர் வன விலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

புலி, யானை உட்பட அனைத்து வன விலங்குகள் எண்ணிக்கை எடுப்பதுடன், காப்பகத்தில் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+