மழைக்காக ஒரு பிரார்த்தனை!
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
கத்திரி கழிஞ்ச உடனே
காத்தடிக்க ஆரம்பிக்கும்…
உழுது போட்ட நிலம்
உலந்த பெறகு மழை பேஞ்சா
மண்ணெல்லாம் பசியாறும்…
பருவமழை காலத்துல தொடங்குனா
வயக்காட்டுல நெல்லு
நல்லா விளையுமுன்னு
தாத்தா சொன்னாங்க….
சித்திரை மொதநாளு
பொன்னேரு கட்டுனப்ப
பொட்டுன்னு விழுந்த
மழைத்துளியால
மனசெல்லாம் குளுந்திருச்சி!
மக்க மனசப்போலவே
மழையும் சரியா பெய்து
வெள்ளாமை விளையணும்னு
தாத்தா கும்பிட்டது
தனக்காக மட்டுமில்ல.












Click it and Unblock the Notifications