செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாள்- ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
தந்தை பெரியாரின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு செப்.17ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications