மே 17 இயக்கம் சார்பில் சென்னையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த கருத்தரங்கம்
மதுரை: மே பதினேழு இயக்கம் சார்பில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற உள்ளது.
மே பதினேழு இயக்கம் சார்பில் வரும் 28-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும் குறித்த கருத்தரங்கம் சென்னை தி. நகரில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்களில் ஐ.நா. அறிக்கையும், ஊடகமும் என்ற தலைப்பில் டி.எஸ்.எஸ். மணி, ஐ.நா. அறிக்கையின் சாராம்சங்கள் - சாதகமும், பாதகமும் என்ற தலைப்பில் பிரியா தம்பி, அருள் எழிலன், வழக்கறிஞர். பாண்டிமாதேவியும், ஐ.நா. அறிக்கையும், இந்தியாவும் என்ற தலைப்பில் தேவசகாயம், இராசேந்திரச் சோழனும், ஐ. நா. அறிக்கையும், மனித உரிமைப்போரும் என்ற தலைப்பில் பேரா. பால் நியுமென், சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை என்ற தலைப்பில் வெப்துனியா டாட் காம் ஆசிரியர் அய்யநாதன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் பேச உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஈழ ஆதரவாளர்கள், தமிழ் பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்தினை பதிவு செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications