பக்கத்து ஊருக்கும் பங்கு போகும்!!
Subscribe to Oneindia Tamil

கோடையில அடிச்ச வெயிலுக்கு
குளம், குட்டையல்லாம் வத்திப் போச்சு…
கொஞ்ச நஞ்ச தண்ணியில
அயிரையும், கெளுத்தியும்
துள்ளிக்கிட்டுருக்கும்….
ஊரே கூடி வந்து
சேத்தக் கிளறி மீன் பிடிக்க
அகப்பட்டவரைக்கும்
கொண்டாட்டந்தான்…
கொசுவலையும், மூங்கில் கூடையும்
மீனால நெறைஞ்சிருக்க
ஊரெல்லாம் மணக்கும்
மீன் கொழம்பு வாசனை…
பொண்ணு கட்டுன மாப்பிள்ளைக்கு
அயிரை மீன் கொழம்பு
அத்தனை பிரியமாம்…
அதனால
அயிரையும், கெளுத்தியும்
பக்கத்து ஊருக்கும் பங்கு போகும்!.












Click it and Unblock the Notifications