துபாயில் இன்றும், நாளையும் இலவச சட்ட உதவி முகாம்: வழக்கறிஞர் நந்தகுமார் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இலவச சட்ட உதவி முகாம் இன்றும்(22ம் தேதி), நாளையும் நடக்கின்றது.
துபாயில் இலவச சட்ட உதவி முகாம் இன்றும்(22ம் தேதி), நாளையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த சட்ட உதவி முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருபவர் வி. நந்தகுமார்.
அமீரக வாழ் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இலவச சட்ட உதவி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 1321722 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications